Sunday, August 2, 2020

கஷாயம் வாரம்


*# திங்கட்கிழமை:*
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

*#செவ்வாய்க்கிழமை:*
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

*# புதன்கிழமை:*
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

*# விழயாகிழமை:*
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

*# வெள்ளிக்கிழமை:*
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

*# சனிக்கிழமை:*
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

*# ஞாயிற்றுக்கிழமை:*
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Saturday, August 1, 2020

இன்றைய சிந்தனை

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*வாழ்வின் சாரம்..!!*

மனம் ஒரு ஏணியாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நீங்கள் அற்பமான கீழ்நிலைக்குப் போகலாம் அல்லது உன்னதமான மேல் நிலையை எட்டலாம். இந்த ஏணி தவிர்த்து ஒதுக்கி விட முடியாத ஒன்று. நீங்கள் மனதின் எஜமானராக மாறினால் தான் ஏணி வழியாக சென்று மேல்நிலை எய்த இயலும். மனதின் சேவகனாக நீங்கள் இருந்தால் கீழ்மட்ட அடிநிலைக்குத்தான் போவீர்கள். 

மனதுக்குச் சேவகனாக இருப்பது ஆபத்தான விஷயம். நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதுடன் அது முடிந்து போவதில்லை. 

மனதில் குழப்பமும் சந்தடியும் நிறைந்து கிடக்கின்றன. அது உங்களை கோபப்படச் சொல்லி உத்தரவு போடும். மறுகணமே கோபப்பட்டதை எண்ணி வருத்தபடு என்று  அதிகாரம் செய்யும். உலகை ரசித்து அனுபவி என்று ஒரு எண்ணம் கூறும். இன்னொரு எண்ணம் சகலத்தையும் துறந்துவிடு என்று எடுத்துரைக்கும். 

திருடினாலும் தப்பில்லை எப்படியாவது பணம் சேர்த்துக் கொள் என்று மனம் அறிவுரை சொல்லும். அது பாவச் செயல் என்று மற்றொரு எண்ணம் மனதில் எழும். இவ்வாறு மனதில் எழும் எண்ணங்களுக்கு கணக்கே இருக்காது. இந்த அனைத்து எண்ணங்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் மனமாகும். 

உங்கள் புத்தி ஏதாவது ஒரு விஷயத்தில் சென்றால் மனம் அமைதியான நிலையில் இருக்கும். மனதில் அதற்கு வழியில்லை. அங்கே எண்ணக் குவியல்கள் மண்டிக் கிடக்கின்றன. சந்தைக்கடை போல அது கசப்பானதாகவே இருக்கிறது. 

மனம் பள்ளியின் வகுப்பறை போன்றது எனலாம்.ஆசிரியர் அங்கே இருக்கும் வரை மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து பாடம் படிப்பார்கள். அங்கே அமைதி நிலவும். ஆசிரியர் எழுந்து அப்பால் போனதும் சகலமும் கட்டவிழ்த்து போய்விடும். சண்டைகள் நடக்கும். புத்தகங்கள் தரையில் வீசப்படும். சிலேட்டுகள் உடைபடும். மேஜைகள் தலைகீழாகக் கவிழும். கரும்பலகையில் கண்டபடி கிறுக்கி வைக்கப்படும். 

இப்போது மாணவர்களைக் கட்டுபடுத்த அங்கே யாரும் கிடையாது. அவர்களை மேற்பார்வை செய்ய ஆளில்லை. ஆசிரியர் திரும்பி வந்ததும் வகுப்பறையில் பரிபூரண அமைதி ஏற்படுகிறது. புத்தகங்கள் பழைய 
இடத்துக்குத் திரும்பி விடுகிறது. எல்லோருடைய பார்வையும் தரைநோக்கித் தாழ்கிறது. மீண்டும் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். 

நீங்கள் எஜமானனாக மாறும் போது மனம் சேவகனாக மாறி அடங்கி நடக்கத் துவங்கி விடும். நீங்கள் உங்கள் அதிகாரத்தை இழக்கும் போது மனம் அடங்காப்பிடாரியாக மாறி விடுகிறது. அதன் ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அங்கே ஒன்றல்ல...பல கணக்கற்ற குரல்கள் ஒலிக்கும். அவை உங்களை எந்த இடத்திற்கும் அழைத்துச் சென்றிட இயலாது. 

மனிதன் பலதரப்பட்ட எண்ணங்களில் வசப்பட்டவன் என்று மகாவீரர் கூறுகிறார். மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. இதை நவீன மனோதத்துவ இயலும் ஒப்புக் கொள்கிறது. மனிதனுக்குப் பல எண்ணங்கள் ஒரே சமயத்தில் உதிக்கின்றன என்பதை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. 

உங்களுக்கு இருப்பது ஒற்றைச் சிந்தனை அல்ல. கணக்கற்ற எண்ணங்கள் உள்ளே ஓடுகின்றன. அது ஒரு வேலைக்காரனுக்கு ஆயிரம் எஜமானர்கள் இருப்பது போன்றதாகும். ஒவ்வொரு எஜமானரும் ஒவ்வொரு உத்தரவு போடுவார். யார் பேச்சை நான் கேட்பது?என்று வேலைக்காரனுக்கு பைத்தியம் பிடித்து விடும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். 

எனவே ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள். அப்போது ஆசிரியர் திரும்பி வந்தது போலாகி விடும். வேலைக்காரர்கள் பலர் இருந்தாலும் ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் வையுங்கள். எஜமான் ஒருவனாக இருக்கும் போது நீங்கள் செல்லவேண்டிய வாழ்க்கை திசை தென்பட்டு விடும். 

வாழ்வின் சாரத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் யார் என்பதை..
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

*💗வாழ்க வளமுடன்💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?

*நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?*

*(மகா மந்திர போதிணி என்ற அபூர்வ நூலில் நான் படித்த விடயங்களை இன்று நம் திருமந்திர Blogger அன்பர்கள்  அறிந்து பயன் பெற பகிர்கிறேன்....*)

நம் பாதங்களில் வசிப்பவள் *ஆதிலஷ்மி.*

நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் *சிவ சிவ* எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் *ஆதிலஷ்மி* நம்மை விட்டு விலகி விடுவாள்.

நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் *கஜலஷ்மி.*

காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும்
நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி* விலகுகிறாள்..!!

நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி..!!*
 வசிக்கிறாள். 

பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி* விலகுகிறாள்.

நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி.*

 இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவே
மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த *விஜயலக்ஷ்மி* விலகி விடுவாள்.!!

வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி...!*

பெற்றோர்கள்  கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.
இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி* விலகி விடுவாள்...!!

நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி...!*

எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் *தான்ய லட்சுமி* விலகி விடுவாள்.

நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..!!*

நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கொடுப்பவர்களை விட்டு *தைரிய லட்சுமி* விலகுகிறாள்.

நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...!!*

கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தை 
 அணியாதவர்களை விட்டு *வித்யா லட்சுமி* விலகுகிறாள்.

நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் *செளபாக்யலஷ்மி.!!*

இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும்  , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி . நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு *சௌபாக்ய லட்சுமி* விலகுகிறாள்..

*பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.?*
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

பிரதோஷ வேளையில், சிவனாரை நினைத்து வழிபடுங்கள்

🚩🕉️🔯🔱🔱🔱🔯🕉️🚩
*பிரதோஷம்,* 
*சனி_பிரதோஷம்;*
*பாவம்_போக்கும்*
*பிரதோஷம்*
    பிரதோஷம் விசேஷம். அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் இன்னும் விசேஷம். இன்றைய தினம்  
 சனிபிரதோஷம். பிரதோஷ வேளையில், சிவனாரை நினைத்து வழிபடுங்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கியருள்வார் ஈசன்.

மாதந்தோறும் பிரதோஷம் வரும். திரயோதசி என்பதே பிரதோஷம். அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. அதுவே பிரதோஷம். ஆக மாதத்துக்கு இரண்டு பிரதோஷம் உண்டு.

ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் சிவனாரை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், சிவபதம் கிடைக்கும். இம்மையிலும் மறுமையிலும் நல்ல நிலையை அடையலாம் என்பார்கள்.

இதேபோல், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இதேபோல், இன்னும் இன்னுமான மகத்துவங்களைக் கொண்டது சனிக்கிழமையில் வரும் பிரதோஷம். சனிப்பிரதோஷம் சர்வ பாவவிமோசனம் என்பார்கள். நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் உட்பட சகல பாவங்களையும் போக்குவார். புண்ணியம் செய்த பலன்களை வழங்குவார் ஈசன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மேலும் சனிப்பிரதோஷ சிவ தரிசனமும் சிவ வழிபாடும் விரதமும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கவல்லவை என்பது ஐதீகம். கிரகங்களால் உண்டான கெடுதல்கள் நீங்கப் பெறலாம். இல்லத்தில் இதுவரை கிழக்கும் மேற்குமாக இருந்த தம்பதி சனிபிரதோஷ வழிபாட்டால், சிவபார்வதியைப் போல் ஐக்கியமாகிவிடுவார்கள். கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது உறுதி.

ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் ரொம்பவே விசேஷம். அம்பாள் வழிபாடுகளைப் பார்த்து சிவனாரை ஆச்சரியப்படுவாராம். அப்படியிருக்க, தன் கணவரை தென்னாடுடைய சிவனாரை மகிழ்விக்க, அவரிடம் இருந்து வரங்களைப் பெற, உமையவளே பிரதோஷ பூஜைகள் செய்தாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  இன்று18ம் தேதி பிரதோஷம். ஆடிப் பிரதோஷம். சனிப் பிரதோஷம்.அற்புதமான இந்தநாளில், சிவனாரை வணங்குவோம். பசுக்களுக்கு உணவளிப்போம். பிரதோஷ பூஜை வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு, அபிஷேகத்துக்கு பொருட்கள் வழங்குங்கள். முடிந்தால், வில்வம் கிடைத்தால் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தக் கொடுங்கள்.

இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் சிவனார். சனிப்பிரதோஷ நாளில், அப்பன் சிவனை வணங்குவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்

*ஆடியில் தினம் ஓர் மாரியம்மன் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்* 

   *🌿குலம் காப்பவளாம் மகமாயி🌿*

*பகிர்வு-சிவசிவ அன்பேசிவம்*

*🌿திருவப்பூர் முத்துமாரியம்மன்🌿*

*கோயில் பற்றி பார்ப்போம்*

 *💥🌻 இவ்வாலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.கோயிலின் திருச்சுற்றில் மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியின் சிலைகள் உள்ளன.*

 *💥🌻அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவரக்காத்திருந்தார்.அன்னையின் திருவிளையாடலின்படி  வேட அடியார்களாகிய கருப்பன், சுப்பன், காத்தமுத்து ஆகியோர் முன் உடும்பு உருவத்தில் காணப்பட்டார். தக்கதொரு வேட்டைப்பொருள் வாய்த்தது எனக்கருதி வேட அடியார்கள் உடும்பைப் பிடிக்க முயன்றனர். மறைந்து மறைந்து உடும்பு ஓட வேட அடியார்களும் பின்தொடர்ந்து ஓடினர். தொடர்ந்து ஓடிய உடும்பு அடர்ந்த காடுகளில் வெகுதூரம் ஓடி, வேடர்களின் கண்ணுக்கு தெரிந்த நிலையில் ஒரு பொந்துக்குள் புகுந்தது. அன்னை புண்ணிய பூமியில் தோன்றக் காத்திருந்து இடத்திலேயே அந்தப்பொந்து இருந்தது.* 

*💥🌻இந்த இடம் அக்காலத்தில் காளிக்கோட்டை என்ற பெயரில் வழங்கி வந்தது. இந்த இடத்திலிருந்து கோட்டைப் பிற்காலத்தில் தொண்டைமான்களின் போரின்போது இடித்து அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கவினாட்டு கண்மாயில் நடைபெற்ற பல போர்களை வரலாறு தெரிவிக்கிறது. அருள்வாக்குப்படி அன்னையின் திருவுருவச்சிலையை தங்களது இருப்பிடப்பகுதி நோக்கி சுமந்து வந்தனர். அன்னைக்குப் பிடித்தமான இடம் வந்தபோது இறக்கி வைக்க நேர்ந்தது. இந்த இடமே தனக்கு உகந்தது என அன்னை தெரிவித்தார். அந்த இடம்தான் இன்று அன்னை எழுந்தருளியுள்ள திருவப்பூர் ஆகும்.*

*💥🌻 இந்நிகழ்ச்சி கிபி 1732 ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்றதாகும். கண்கண்ட தெய்வமாம் அன்னை முத்துமாரியை தக்கதொரு கட்டிடத்தில் அமர்த்த இயலாத நிலை வேட அடியார்களோ அன்றைய பசியை போக்க காடு, மேடு அலைந்து காய், கனிகளையும் இலை, கிழங்குகளையும், வேட்டைப்பொருள்கள் மூலமாக உணவு தேட வேண்டிய நிலை. இந்நிலையில் கட்டிடம் கட்ட பொன், பொருளேது. பக்தர் நிலையறிந்து அன்னையவள் பச்சை இலைக்கூடாரம் அமைத்து பராமரிக்க கூறினார்.*

*💥🌻புதுக்கோட்டை திருக்கோயில்களை சார்ந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் புதுகை மன்னர்கள் பிரதானமாக வழிபடும் கோவில் ஆகும்.*

*இக்கோயிலுக்கு காலம் காலமாக சட்டத்தேரில் பவனி வந்த அம்பாளுக்கு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் அறக்கட்டளை மற்றும் திருவப்பூர் கவிநாடு கிராமத்தார்களின் பெரும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று வைரத்தேர் (மரத்தேர்) செய்யப்பட்டு கடந்த 24.2.2009ல் வெள்ளோட்டம் விடப்பட்டது.*

*💥🌻திருவப்பூர் முத்துமாரி அம்பாளுக்கு தங்கத்தில் தாலி, மூலஸ்தான கோபுர தங்க கலசம் அத்துடன் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய தாய் நிலை கதவு, முகப்பு மண்டபம், முகப்பு விமானம், கோபுர வர்ணங்கள், எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக 29.1.2010 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.* 

 
*🙏நன்றி

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்கூறும் அறிவுரைகள்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்
கூறும் 
அறிவுரைகள்.....

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....

(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...

(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....

(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
---------------------

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. 

ஓடுவது முள் அல்ல..! 
நம் வாழ்க்கை...

 . . . . . .......படித்ததில் பிடித்தது!

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் !

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் ! 

2.8.20

- ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை !

ஆடிப்பெருக்கு ஆடி 18 அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார்.

சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்து கொண்டிருந்த வேளை... அப்போது தென்திசைக்குச் செல்லுமாறு பணிக்கப்படுகிறார் அகத்திய பெருமான்.

அகத்தியருக்கு ஆசி வழங்கி அவரைத் தென் திசைக்கு அனுப்பும்போது தன் கரங்களில் தவழ்ந்திருக்கும் மலர் மாலை ஒன்றை அவருக்கு வழங்குகிறாள் பார்வதிதேவி. அந்த மாலை ஒரு இளம்பெண் ணாக உருமாறுகிறது. தவசீலரான அகத்தியர் அவளைத் தன் கமண்டலத்துக்குள் அடக்கி விடுகிறார்.

குடகில் தவம் இருந்தபோது கமண்டலம் சரிந்து, நீர் ஓடியதல்லவா? கமண்டலத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்ணே காவிரி என்னும் நதியாகிப் பெருகி ஓடினாளாம். எனவே, காவிரி என்பவளும் பார்வதிதேவியின் ஓர் அம்சமே. அதாவது, சிவபெருமானின் தேவி என்றும் சொல்வர்.

இந்தக் கதைப்படி பார்த்தால், மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே!எனவேதான் தன் அண்ணனை வணங்கும் விதமாக மாலவன் ஸ்ரீரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி. மலர் மாலையில் இருந்து பிறந்தவள்தானே காவிரி! 

ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் பார்க்கிறோம். தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.

வருடத்தின் சில விழாக்களில் இந்தப் பாசத்தை ஸ்ரீரங்கநாதரே வெளிப்படுத்துவார். அதில் ஒன்று - இந்த ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கு அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார். உறவினர்கள் வீடுகளுக்குப் போனால் அவர்களது முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருப்போம், அல்லவா? அதுபோல் பாச மிகுதியால் தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் அமர்ந்திருப்பார். போன சூட்டோடு உடனே கிளம்பி விட மாட்டார். மாலை வரை அதே இடத்திலேயே நம்பெருமாள் காணப்படுவார்.

காலையில் இவருக்கு காவிரிப் படித்துறையில் திருமஞ்சனம் நடைபெறும். வருகின்ற பக்தர்கள் அனைவரும் அண்ணனையும், தங்கையையும் வணங்குவார்கள். திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார் ஸ்ரீரங்கநாதர்.
 இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். 

இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர்.🙏🌹🌈

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...