*ஆடியில் தினம் ஓர் மாரியம்மன் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்*
*🌿குலம் காப்பவளாம் மகமாயி🌿*
*பகிர்வு-சிவசிவ அன்பேசிவம்*
*🌿திருவப்பூர் முத்துமாரியம்மன்🌿*
*கோயில் பற்றி பார்ப்போம்*
*💥🌻 இவ்வாலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.கோயிலின் திருச்சுற்றில் மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியின் சிலைகள் உள்ளன.*
*💥🌻அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவரக்காத்திருந்தார்.அன்னையின் திருவிளையாடலின்படி வேட அடியார்களாகிய கருப்பன், சுப்பன், காத்தமுத்து ஆகியோர் முன் உடும்பு உருவத்தில் காணப்பட்டார். தக்கதொரு வேட்டைப்பொருள் வாய்த்தது எனக்கருதி வேட அடியார்கள் உடும்பைப் பிடிக்க முயன்றனர். மறைந்து மறைந்து உடும்பு ஓட வேட அடியார்களும் பின்தொடர்ந்து ஓடினர். தொடர்ந்து ஓடிய உடும்பு அடர்ந்த காடுகளில் வெகுதூரம் ஓடி, வேடர்களின் கண்ணுக்கு தெரிந்த நிலையில் ஒரு பொந்துக்குள் புகுந்தது. அன்னை புண்ணிய பூமியில் தோன்றக் காத்திருந்து இடத்திலேயே அந்தப்பொந்து இருந்தது.*
*💥🌻இந்த இடம் அக்காலத்தில் காளிக்கோட்டை என்ற பெயரில் வழங்கி வந்தது. இந்த இடத்திலிருந்து கோட்டைப் பிற்காலத்தில் தொண்டைமான்களின் போரின்போது இடித்து அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கவினாட்டு கண்மாயில் நடைபெற்ற பல போர்களை வரலாறு தெரிவிக்கிறது. அருள்வாக்குப்படி அன்னையின் திருவுருவச்சிலையை தங்களது இருப்பிடப்பகுதி நோக்கி சுமந்து வந்தனர். அன்னைக்குப் பிடித்தமான இடம் வந்தபோது இறக்கி வைக்க நேர்ந்தது. இந்த இடமே தனக்கு உகந்தது என அன்னை தெரிவித்தார். அந்த இடம்தான் இன்று அன்னை எழுந்தருளியுள்ள திருவப்பூர் ஆகும்.*
*💥🌻 இந்நிகழ்ச்சி கிபி 1732 ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்றதாகும். கண்கண்ட தெய்வமாம் அன்னை முத்துமாரியை தக்கதொரு கட்டிடத்தில் அமர்த்த இயலாத நிலை வேட அடியார்களோ அன்றைய பசியை போக்க காடு, மேடு அலைந்து காய், கனிகளையும் இலை, கிழங்குகளையும், வேட்டைப்பொருள்கள் மூலமாக உணவு தேட வேண்டிய நிலை. இந்நிலையில் கட்டிடம் கட்ட பொன், பொருளேது. பக்தர் நிலையறிந்து அன்னையவள் பச்சை இலைக்கூடாரம் அமைத்து பராமரிக்க கூறினார்.*
*💥🌻புதுக்கோட்டை திருக்கோயில்களை சார்ந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் புதுகை மன்னர்கள் பிரதானமாக வழிபடும் கோவில் ஆகும்.*
*இக்கோயிலுக்கு காலம் காலமாக சட்டத்தேரில் பவனி வந்த அம்பாளுக்கு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் அறக்கட்டளை மற்றும் திருவப்பூர் கவிநாடு கிராமத்தார்களின் பெரும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று வைரத்தேர் (மரத்தேர்) செய்யப்பட்டு கடந்த 24.2.2009ல் வெள்ளோட்டம் விடப்பட்டது.*
*💥🌻திருவப்பூர் முத்துமாரி அம்பாளுக்கு தங்கத்தில் தாலி, மூலஸ்தான கோபுர தங்க கலசம் அத்துடன் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய தாய் நிலை கதவு, முகப்பு மண்டபம், முகப்பு விமானம், கோபுர வர்ணங்கள், எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக 29.1.2010 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.*
*🙏நன்றி
No comments:
Post a Comment