💦 💦 💦 💦 💦 💦 💦
*ஆசையின் அளவு...?*
ஒரு மனிதனின் மகிழ்ச்சியைக்
காண விரும்பிய கடவுள் அவன்
முன்னே தோன்றி..!
“உனக்கு என்ன
வேண்டும்?” என்று கேட்டார்.
“பணம், செல்வம், தங்கம், வைரம்!”
என்றான் மனிதன் ஆசையோடு.
கடவுள் வலது கையின்
சுட்டுவிரலை நீட்டினார்..
அங்கிருந்த பீரோ தங்கமானது.!
ஆனால் மனிதன் பேசாமல் இருந்தான்.
கடவுள் மறுபடி விரலை நீட்ட,
அங்கிருந்த மேடை தங்கமானது.
அவன் பேசாமல் இருந்தான்,
கடவுள் வேக வேகமாக அந்த
அறையில் உள்ள
பொருட்களை எல்லாம்
தங்கமாக்கினார்..
அப்போதும் மனிதன் சிரிக்கவில்லை.
சோர்ந்து போன கடவுள் மனிதனிடம்
கேட்டார்.
“இன்னும் உனக்கு என்ன வேண்டும்?”
என்று.
“அந்த விரல் வேண்டும்” என்றான்
மனிதன்.
கடவுள் மயங்கி விழுந்தார்.
😔😔😔😔😊😊😊😊😊
No comments:
Post a Comment