Thursday, July 30, 2020

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

🌹🕉️🌹🕉️🌹🕉️🌹
*ஆடி தபசு ஸ்பெஷல் !*
➖➖➖➖➖➖➖
*வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!*

ஒரு வருடம் பழமும், 
ஒரு வருடம் சருகும், 
ஒரு வருடம் தண்ணீரும், 
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். 

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.

எதுவுமே இங்கு தேவையில்லை. 

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். 

பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், 
இரண்டு நாள் தங்கினால் 
இப்பிறப்பில் செய்த பாவமும், 
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை 
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். 

திங்களன்று சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். 

வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர். 

சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும். 

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.

இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு. 

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். 

ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும் 

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும். 

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். 

இத்தலம் எதுவென 
இன்னும் புரியவில்லையா?  

சங்கரனாகிய சிவனும் 
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது. 

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்… 

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு 
எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. 

ஓம் ஹரி ஹர நமோஸ்துதே🙏
✴️💐✴️💐✴️💐✴️

பஞ்சாங்கம்

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* . 

*🚩🔯பஞ்சாங்கம்🔯🚩*

*ஆடி ~ 16* ~
*{31.07.2020}  வெள்ளிக்கிழமை.*

*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம்.* 

*3.ருது ~ க்ரீஷ்ம  ருதௌ.*

*4.மாதம் ~ ஆடி ( கடக மாஸம் ).*

*5.பக்ஷம் ~ சுக்ல  பக்ஷம்.*

*6.திதி ~ துவாதசி .*
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி.*

*7.நாள்    வெள்ளிக்கிழமை ~ {ப்ருஹு வாஸரம்)}* ~~~~~         

 *8.நக்ஷத்திரம் - கேட்டை காலை 08.52 AM வரை. பிறகு மூலம்.*

*யோகம் ~ காலை 08.52 AM வரை  சரி இல்லை. பிறகு அமிர்த யோகம்.*

*கரணம் ~ பவம், பாலவம்.*

*நல்ல நேரம் ~ காலை  09.15 AM ~ 10.15 AM  & 01.45 PM ~ 02.45 PM.*

*ராகு காலம் ~  காலை 10.30 AM ~ 12.00 NOON.*

*எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~  04.30  PM*.

*குளிகை ~ காலை 07.30~ 09.00 AM*. 

*சூரிய உதயம்  ~ காலை 06.02 AM*.

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.33 PM.*

*சந்திராஷ்டமம். ~ கார்திகை .*. 

*சூலம் ~  மேற்கு.                      பரிகாரம் ~ வெல்லம்* 

*இன்று - வர லக்ஷ்மி விரதம்.*🙏🙏             
                                                                                
*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*🚩🔯PANCHAANGAM🔯🚩*

*AADI ~ 16* 
 (31.07.2020) FRIDAY*.

*1.YEAR ~ SAARAVARI VARUDAM {SAARVARI NAMA VATHSARAM}.*
*2.AYANAM  ~ DHAKSHINAAYANAM*.
*3.RUTHU ~ GREESHMA RUTHU.*
*4.MONTH ~ AADI.{ KADAKA MAASAM}.*
*5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*6.THITHI ~ DUVADHASI*
*SRAARTHTHA THITHI ~ DUVADHASI*
*7.DAY ~ FRIDAY( BRUHU VASARAM).*
*8.NAKSHATRAM ~ KETTAI  UPTO 08.52. AM. AFTERWARDS MOOLAM*   

*YOGAM ~ NOT GOOD UPTO O8.52 AM. AFTERWARDS  AMIRIDHA  YOGAM.*
*KARANAM ~ BHAVAM, BAALAVAM.*
*RAGU KALAM .~10.30 AM~12.00 NOON*.
*YEMAGANDAM ~03.00 ~ 04.30 PM*.
*KULIGAI  : 07.30 ~ 09.00 AM*.
*GOOD TIME ~ 09.15 AM ~ 10.15 AM   &  01.45  PM ~ 02.45 PM* . 
*SUN RISE   ~ 06.02. AM*.
*SUNSET ~ 06.33 PM*.
*CHANDRAASHTAMAM ~ KAARTHIGAI*
*SOOLAM  ~ WEST*.
*PARIGARAM*~ *JAGGERY.*
*TODAY ~ VARALAKSHMI VIRATHAM. .*🙏                                

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்

*🌹💫எல்லாம் விதியின்படிதான் நடக்கும்*🌹💫

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ஒரு நாள்.... "எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான். 

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :  !!!!  ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : ” நல்லது, இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”

மனிதன்: ” சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம்”.

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம்!

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான், குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான்.

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்....

அந்த மனிதனிடம் சொன்னான்.  “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய்,  அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன். 

மனிதன் :  ஆஹா என்ன அது?!

அது என்னவென்றால்.... பட்டியலின் மேலிருந்து இல்லாமல்,  பட்டியலின் கீழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான்.

கதையின் நீதி :  எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.

நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட...😎

வாழ்வினிது 
சிந்தித்துசெயலாற்றுங்கள்...வாழ்த்துக்கள்

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் !


வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் !

லக்ஷ்மி கடாக்ஷம் பெருக சில யோசனைகள்

• அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று
பெயர். 

அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். 

இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். 

அந்த நேரத்தில் தேவர்களும் , முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் . அவர்கள் சந்தோஷப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

• அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

• அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது , தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.

• செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி
திருமகளை வழிப்பட வேண்டும்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோசமும் பெருகும்.

• ஒவ்வொரு பௌர்ணமி  அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

• வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். 

ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. 

தன காலத்திருக்குப் பின்னரே
அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக
வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில .........

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில்
நின்று கொடுக்க கூடாது . 

கொடுப்பவரும் , வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

• வாசற்படி, அம்மி,ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

• இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

• வெற்றிலை  வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது
வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

• சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

• குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும்
அணைக்ககூடாது . புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

• வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும்
கூறக்கூடாது

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது

• துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

• உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

• ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். 

அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. 

அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

• வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். 

விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். 

நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. 

லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. 

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். 

எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.  நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

• சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,
யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு
மிகவும் பிடித்தவை.

• தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

• பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி

•வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

• செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள்
வளர்க்கலாம்.

• சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

• காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

• தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. 

விளக்கை அமர்த்துதல் அல்லது ம

லையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.

 ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

• வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

• மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

• ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை
செய்யுங்கள்.

• எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. 

எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

• எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில்
பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். 

அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோஷமும் பெருகும்.

• எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. 

இந்தப்
பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

• சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில்
மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

• தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

• குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. 

கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை
உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். 

இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

• அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.

கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். 

கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

• பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

• அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

• வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

• வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்
கூடாது.

• மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக்
கூடாது.

• விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக்
கொடுக்கக் கூடாது.

• விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

• கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில்கோலம்
இடுவது அவசியம்.பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின்டோர்
வாசலில் கோலம் வரையலாம்.

• வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

• பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. 

ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவேண்டும்.

• வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, 

வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. 

சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. 

பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

•அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

• பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

• சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

• ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

• தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

• பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி
படங்கள் மீது விழக்கூடாது

• தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்து விடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

அலைமகள் சரணம் !

அஷ்டதிக் பாலகர்கள் யார்?

ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻
ஓம் அஷ்டதிக் பாலக தேவதாப்யோ நம.

அஷ்டதிக் பாலகர்கள் யார்? 

இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?

அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். 

எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று  அழைக்கிறோம்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். 

இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே 

இந்திரன், 
அக்னி தேவன், 
எமன், 
நிர்ருதி, 
வருண தேவன், 
வாயு தேவன், 
குபேரன், 
ஈசானன் 
ஆகிய எட்டு பேர் விளங்குகின்றனர்.

நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து, நாம் செய்யும் எல்லா செயல்களையும் கவனித்து, அதற்கு சாட்சியாகவும் இருக்கும் திசைநாயகர்களே,அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

எண் திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பவர்களும் அவர்களே.

இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.  

வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவர்களாக சிறப்பித்து சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அஷ்டதிக் பாலகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திரன்: 

கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே  அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
 
அக்னி தேவன்: 

தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி. இவரை வழிபாடு செய்தால் தேக வனப்பு மற்றும் தேக பலம், மனஅமைதி,  குடும்ப மேன்மை கிடைக்கும்.
 
எமன்: 

தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சூரிய பகவான்  மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் குபேர ஜாயை. இவரை வழிபாடு செய்தால் நம்மை  அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும்.
 
வருண பகவான்: 

மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி.  இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.
 
நிருதி: 

தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி தேவனின், மனைவி பெயர் கட்கி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும்.
 
வாயு பகவான்: 

வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை.இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.
 
குபேரன்: 

வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். இவரை  வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
 
ஈசானன்: 

வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது  குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.
அஷ்டதிக் பாலகர்களின் காயத்ரி மந்திரங்கள்:-

1.இந்திர காயத்ரி மந்திரம்:

ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே 
வஜ்ர ஹஸ்தாய தீமஹி 
தந்நோ இந்திர ப்ரசோதயாத்.

2.அக்னி காயத்ரி மந்திரம்:

ஓம் மஹா ஜவாலாய வித்மஹே 
அக்னி தேவாய தீமஹி 
தந்நோ அக்னி ப்ரசோதயாத்.

3.யம காயத்ரி மந்திரம்:

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே
தண்ட தராய தீமஹி 
தந்நோ யம ப்ரசோதயாத்.

4.நிர்ருதி காயத்ரி மந்திரம்:

ஓம் நிசாசராய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தந்நோ நிர்ருதி ப்ரசோதயாத்

5.வருண காயத்ரி மந்திரம்:

ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலபுருஷாய தீமஹி 
தந்நோ வருண ப்ரசோதயாத்.

6.வாயு காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே 
பூலோக சஞ்சாரய தீமஹி 
தந்நோ வாயு ப்ரசோதயாத்.

7.குபேர காயத்ரி மந்திரம்:

ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி 
தந்நோ குபேர ப்ரசோதயாத்.

8.ஈசான்ய காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே 
சிவ ரூபாய தீமஹி 
தந்நோ ரூத்ர ப்ரசோதயாத்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

நாக_தோஷ_பரிகாரம்_பற்றிய_50_சிறப்பு_தகவல்கள்

 Chairmadurai:
#நாக_தோஷ_பரிகாரம்_பற்றிய_50_சிறப்பு_தகவல்கள்

ராகு, கேது தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.

1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.

2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.

3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.

5. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.

6. ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.

7. நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

8. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

9. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

10. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.

11. கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.

12. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.

13. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

14. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

15. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.

16. ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.

17. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

18. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

19. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அ

டியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.

20. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும். 

21. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

22. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும். 

23. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

24. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

25. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

26. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.

27. ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந் தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

28. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வரஞ வேண்டும்.

29. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

30. ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.

31. துர்க்கா சூக்த மந்திரங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் ஆஹ¨தி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது.

32. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.

33. ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனி பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு:-

34. தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

35. தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

36. துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

37. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

38. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

39. கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
40. வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.

41. கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

42. குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

43. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்

கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

44. கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.

45. கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

46. கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

47. மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

48. கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம்.

49. கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. 

50. சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.
#வாழ்கவளமுடன்

கருட_புராணம்_ஓர் அறிமுகம்...!!

#கருட_புராணம் : 
#நமக்கு_எடுத்துரைப்பது

 என்ன?... ஏன் படிக்க வேண்டும்?...

#கருட_புராணம்_ஓர் #அறிமுகம்...!!

பிறக்கின்ற அனைத்து பிறவிகளிலும் துன்பங்களை அனுபவிக்காமல் சில பிறவிகள் இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்ற காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, பலவிதமான தகவல்களையும் நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட அந்த பயணத்தின் விளைவாக பரம்பொருளின் அருளோடும், நமக்கு இந்த பூமியில் வாழ்வது எப்படி? என்றும், தவறான செயல்களில் ஈடுபடுவதால் நமக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்றும் விரிவாக எடுத்துரைக்கும் பொருட்டு கருடரின் உதவியோடு கருட புராணம் பலவிதமான ரகசியங்களையும் எடுத்துரைக்கின்றது.

#கருட_புராணம் என்பது பூமியில் பிறந்து, ஆன்மாவுடன் உடலும் இணைந்து இருக்கும் பொழுது நாம் எவ்விதம் வாழ வேண்டும்? என்றும், அவ்விதமாக வாழும்போது நாம் செய்த கர்மாக்களின் அடிப்படையில் உடலை இழந்த ஆன்மா அனுபவிக்கக்கூடிய இன்ப, துன்பங்களை பற்றி எடுத்துரைக்கும் ஒரு வாழ்க்கை சாஸ்திரமாகும்.

#கருட_புராணத்தை படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவர் வாசிக்க இன்னொருவர் கேட்பதன் மூலமாகவோ இந்த பூமியில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இயலும். நாம் செய்யும் சிறு செயல்கள் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதையும் இந்த புராணம் நமக்கு எடுத்துரைக்கும்.

நமது பெற்றோர்களுக்கு நாம் எவ்விதம் சில கடமைகளை செய்ய வேண்டும்? என்றும், அந்த கடமைகளை செய்ய தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றியும், நாம் முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கக்கூடிய புராணம் கருட புராணம் ஆகும்.

இந்த பூமியில் வாழும் வரை நம்மால் முடிந்த அளவு எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருட புராணத்தை பற்றி அறிந்து கொள்ள நமது முதல் அடியை எடுத்து வைப்போம்.

ஆளை பார்த்தவுடன் எடை போட கூடாது

ஆளை பார்த்தவுடன் எடை போட கூடாது (சிறுகதை)                        
*HONEST IS THE BEST POLICY*

உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார்.

அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார்.
ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?”

”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!”
“ரொம்ப கம்மியா யிருக்கே!”
”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!”
” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”
“நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”

“230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!”
”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!”
”சரி சரி உள்ளே வா! வீடே ஒரே நியுஸ் பேப்பர் அடைசலா இருக்குண்னு எம்பொண்டாட்டி கத்திக்கிட்டிருந்தா அதான் வரச்சொல்லியிருக்கா எடையெல்லாம்  ஒழுங்கா போடுவே இல்லே…!”
”கரெக்டா இருக்கும் சார்!”
அந்த மனிதர்  பழைய இரும்புத்தராசுடன் உள்ளே நுழைய ”லட்சுமி! பழைய பேப்பர் எடுக்க வந்திருக்காங்க சீக்கிரம் வா!”
”நான் கொஞ்சம் அடுப்படியிலே வேலையா இருக்கேன். நீங்களே எடுத்துப்போடக்கூடாதா?”
”அப்ப திருப்பி அனுப்பிச்சரவா?”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே வந்து எடுத்து போட்டுத் தொலைக்கிறேன்.”
லட்சுமி முணுமுணுத்தபடி கிச்சனில் இருந்து வந்து  ஹாலில் கப்போர்டில் கிடந்த பேப்பர்களை அள்ளி வராந்தாவில் போட்டாள்.
சிதறிக்கிடந்த பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.

”அப்படியே ஒரு கயிரு போட்டு கட்டி வைச்சிருந்தா எடை போட சுலபமா இருந்திருக்கும்யா…!”
”ஏன் நீ கயிறு கொண்டு வர மாட்டியா? ”
“இருக்குய்யா ! வண்டியிலே இருக்கு! போய் கொண்டு வரனும்!”
” போய் கொண்டு வா!”
”அந்த பெரியவர் எழுந்தார். ரொம்ப தாகமா இருக்குய்யா! குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?”

”கேட்டு ஓரமா ஒரு பைப் இருக்கு பாரு…! அதுலே பிடிச்சு குடிச்சுட்டு போய் கயிறு கொண்டுவா!”
பெரியவர்  எழுந்து போய்  அந்த குழாயை திருகினார். வெயிலில் சுடுதண்ணீராய்  கையில் விழுந்த நீரை கொஞ்சம் கீழே விட்டு முகம் கழுவி பின்னர் இரண்டு கை பிடித்து அருந்தினார். முகத்தை தோளில் போட்டிருந்த அழுக்குத்துண்டால் துடைத்துக்கொன்டு வெளியே நிறுத்தியிருந்த அந்த மூன்று சக்கர ட்ரை சைக்கிளை  உள்ளே தள்ளிக் கொண்டு வந்தார்.

”கயிரை எடுத்து வான்னு சொன்னா வண்டியையே கொண்டு வந்திட்டியே?” மணிவாசகம் கேட்க
”பேப்பர் நிறைய இருக்குதுய்யா! அதான் எடை போட்டதும் வண்டியிலே எடுத்துபோக சவுகரியமா இருக்கும்னு கொண்டு வந்தேன்.”
”சரி பெரியவரே…! உங்க பேரு என்ன?”
“முத்து”
“எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க?”

”அது ஆகிப்போச்சுங்க முப்பது வருஷம்!”
”ஒருநாளைக்கு எவ்வளோ கிடைக்கும்.?”
”அது வியாபாரத்தை பொருத்துங்க! வீடுங்கள்லே வேண்டாம்னு எவ்வளோ தூக்கிப்போடறீங்களோ  அவ்வளவும் எங்களுக்கு சோறூ போடற தெய்வங்கள்!”
பேசிக்கொண்டே இருந்தாலும் பெரியவர் முத்து பேப்பர்களை இரண்டு மூன்று அடுக்குகளாக அடுக்கி கட்டினார்.
அப்புறம் எடை போட ஆரம்பித்தார். இரண்டு கிலோ எடைக்கல் ஒன்றும் ஒருகிலோ எடைக்கல் ஒன்றையும் சேர்த்து  தராசில் வைத்து மறுபக்கம் பேப்பர்களை வைத்தார்.  தூக்க முடியாமல் தராசை தூக்கி நிறுத்த முள் பேப்பர் இருந்த பக்கம் தாழ்ந்தது. கொஞ்சம்  பேப்பர்களை எடுத்துவிட்டு மீண்டும் நிறுத்தார்.
இதற்குள் வார இதழ்கள் சில நாவல் புத்தகங்கலையும்  என் மகன் படித்து முடித்த கல்லூரி பாடப்புத்தகங்களையும் கொண்டுவந்து போட்டாள் லட்சுமி.

” பேப்பர் வரைக்கு 5 எடை இருக்குய்யா!  அஞ்சு மூணு 15 கிலோ…”
” புக் எல்லாம் எட்டு கிலோ  இருக்கு.”
”மொத்தம் 23 கிலோ”
”பேப்பருக்கு 150 ரூபா… புக்கு கிலோ பன்னெண்டு ரூபா அப்போ  தொண்ணூத்தாறூ  ரூபா”
”மொத்தம்  எரநூத்து நாப்பத்தாறு ரூபா ” என்றவர்..
”ஐயா, எதாவது தக்காளி வெங்காயம் வேணுங்களா?”
”உன் அழுகின தக்காளி  யாருக்கு வேணூம்? பணத்தை கொடுத்திட்டு பேப்பரை எடுத்துட்டு கிளம்பு.”
”ஐயா,  அம்பது ரூபா கம்மியா இருக்கு! அதுக்கு எதாவது வெங்காயம் தக்காளி வாங்கிக்குங்க!”

”அதானே பாத்தேன்…! இப்படி எதையாவது சொல்லி அழுகுன தக்காளீயை தலையிலே கட்டப் பாக்கறீயா?”
”இல்லே சார்…! இன்னைக்கு காலையிலே மார்க்கெட்ல எடுத்த புதுத் தக்காளி நீங்களே பொறுக்கி எடுத்துக்கங்க!

 ரெண்டரை கிலோ ஐம்பது ரூபா..”
”மார்க்கெட்ல தக்காளி கிலோ பாஞ்சு ரூபாதான்..!”
”அது நேத்து ரேட்டுங்கய்யா!  இன்னிக்கு கிலோ இருபது ரூபாதான்!  உங்களுக்கா வேனூம்னா மூணு கிலோ போடறேன்..!”
”யாருக்கு வேணூம் உன் பிச்சை!  ரூபா இருந்தா கொடுத்துட்டு பேப்பரை எடுத்துக்கோ இல்லேன்னா கிளம்பு. நாங்க வேற ஆளூக்கு போட்டுக்கறோம்!”

” முத போணீ ஐயா!  காலையிலே இருந்து வெயில்ல சுத்திட்டு வரேன்!  கடைக்கு இன்னும்  அஞ்சு கிலோமீட்டர் போகணூம் ”
”அதுக்கு…!”
”இரு நூரு ரூபா இப்ப வாங்கிடுங்க! மிச்சம் ஐம்பது ரூபா நாளக்கி வரும்போது கொடுத்துடறேன்!”

”முழுசா அம்பது ரூபாயை ஆட்டையை போட பாக்கிறீயே?”
”அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்யா! இந்த ஏரியாவுலேதான் முப்பது வருஷமா வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கேன்.. உங்க துட்டு எனக்கு வேண்டாம்யா…! ஏமாத்தி துண்ணா உடம்புலே ஒட்டாதுய்யா! நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுத்துடறேன்யா!”
”அப்ப ஒண்ணூ பண்ணு இருநூரு ரூபாவுக்கு எவ்வளோ பேப்பரோ அதை மட்டும்  எடுத்துட்டு போ!  நாளக்கி வரும்போது மீதி பணம் கொடுத்திட்டு மிச்சத்தை எடுத்துப்போ… ”கறாராக சொன்னார் மணி வாசகம்.

இனி பேசி பிரயோசனம் இல்லை..! என்று அவர் சொன்னபடி இருநூறு ரூபாயை கொடுத்துவிட்டு பேப்பர் பதினைந்து கிலோவையும்  நாலு கிலோ எடை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் முத்து.

”‘பாவங்க அந்தாளு! இப்படி பச்சாதாபமே இல்லாம விரட்டறீங்க!” அந்த அம்பது ரூபாவை அவன் ஏமாத்த மாட்டான். அப்படியே ஏமாத்தினாலும் நாம கொறைஞ்சா போயிருவோம்.”

”ஏன் பேச மாட்டே? ஒவ்வொரு ரூபாவும் நான் உழைச்சு சம்பாதிச்சு  இந்த அளவுக்கு வந்திருக்கேன். யாருகிட்டேயும் நான் ஏமாறத் தயாரா இல்லே!  அவன் நாளக்கி வர மாட்டான் பாரு… இந்த மாதிரி எத்தனை பேரை நான் எடை போட்டு வைச்சிருக்கேன் தெரியுமா?  

அந்த ஓட்டை தராசுலே எடை போட்டா எப்படியும் கிலோவுக்கு நூறூ கிராம் லாபம் கிடைக்கும். நம்மகிட்டே பத்து ரூபாய்க்கு எடுத்து பன்னென்டு ரூபாவுக்கு விப்பான். ஏமாந்தா எடையிலே இன்னும் கொள்ளையடிப்பான்.”
”இப்படி ஒரு ரூபா ரெண்டு ரூபா லாபம் வரலைன்னா அவன் தொழில் செஞ்சு பிரயோசனம் இல்லாம போயிருங்க! அவன் வயித்து பொழைப்ப பாக்க வேணாம்”.
”சரிசரி! அவனாலே நமக்குள்ளே எதுக்கு பிரச்சனை? ஆக வேண்டிய வேலையைப்பாரு…!” என்று மனைவியை அடக்கினார் மணிவாசகம்.

மறுநாள் மணி வாசகம் சொன்னபடி  முத்து வரவில்லை! பொழுது சாய்ந்துவிட்ட்து.  “பார்த்தியா! நான் சொல்லை! அவன் வர மாட்டான்னு!” என்று அமர்த்தலாக சொன்னார்.

”இன்னிக்கு வேற லைன்ல போயிருப்பார்… நாளைக்கு வருவார்னு நினைக்கிறேன்.”
”உன் நினைப்பை காயப்போடு…!  நமக்கு  நாலு கிலோ பேப்பர் மிச்சம் ஆச்சு! இல்லேன்னா அம்பது ரூபா நஷ்டம் ஆகியிருக்கும்”.
லட்சுமி தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

மறுநாள்  அதிகாலை வேலையிலேயே கேட் கதவு திறக்கவும்  செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த மணி வாசகம்  அப்படியே போட்டுவிட்டு கவனித்தார். 

முத்து உள்ளே நுழையவும் தன் கணிப்பு பொய்யாகிவிட்ட்தே என்று வருத்தமுடன்
”என்னய்யா! அம்பது ரூபா கொண்டு வந்துட்டியா?”
”இல்லீங்கய்யா.. நான் வந்தது”…

”தான் நினைத்தது சரிதான் என்று உள்ளூக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டு  அம்பது ரூபா இல்லாம பேப்பர் போட முடியாது,,,! ”என்றார்
”சரிங்கய்யா! நான் அம்பது ரூபா கொடுத்திட்டே பேப்பர் எடுத்துக்கறேன் . ஆனா.”
”என்னய்யா ஆனா?”
”முந்தா நாள் நீங்க போட்ட புக்ஸ்களை எடுத்துட்டு போனேன். அதுல சில பாட புஸ்தகமும் இருந்த்து.

 அதை கடையிலே போடறதை விட  பழைய புத்தக கடையில கொடுத்தா கொஞ்சம் ரூபா அதிகம் கிடைக்கும்னு தனியா எடுத்து வைச்சேன். பேப்பரை மட்டும் கடையிலே போட்டுட்டு வீட்டுக்கு போய் புக்ஸ்களை புரட்டினேன்.

 அப்ப அதிலே இந்த  காசு இருந்துச்சுய்யா?”  என்று இரண்டு ஐநூறூ ரூபா நோட்டுக்களை நீட்டினார் முத்து.

மணிவாசகம் அதிர்ந்து போனார். ஐம்பது ரூபாயை நம்பாத நான் எங்கே ஆயிரம் ரூபாயை அதுவும் எப்போது வைத்து நான் மறந்து போன அந்த ரூபாயை திருப்பித்தரும் முத்து எங்கே? மிகவும்  எடையில் மிகவும் தாழ்ந்து போய்விட்டோமே என்று வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

மனம் தெளிவடைந்தவராய்  ”பெரியவரே! புத்தகத்தை எடைக்கு போட்டப்புறம் அது உங்களுக்குத்தான் சொந்தம்.  அதுலே பணம் இருந்தாலும் அது உங்களோட்துதான். நீங்களே வச்சுக்கங்க!”

“நீங்க பெரிய மனசோட  இந்த பணத்தை கொடுத்தாலும் உழைக்காம  இவ்வளோ பணம் கிடைச்சா அப்புறம் அது  என் மனசை மாத்திடும். இதே மாதிரி தினமும் கிடைக்காதான்னு ஏங்க வைக்கும். அப்புறம் என் நேர்மையை கொன்னுடும்.

 வேணாங்கய்யா! இதை நீங்களே வச்சிக்குங்க! ”என்று மணிவாசகம் கையில் ரூபாயை திணீத்துவிட்டு  கிள்ம்பினார் முத்து.

”பெரியவரே ஒரு நிமிஷம்!  நேத்து எடை போட்டு வைச்ச புத்தகத்தையாவது எடுத்துட்டு போங்க!”

”அம்பது ரூபா கிடைச்சதும் கண்டிப்பா வரேன்! ”சொல்லிவிட்டு அவர் நடக்க
அப்படியே உறைந்து போய் நின்றார் மணிவாசகம்....

ராகு கேது பெயர்ச்சி 2020

*🔯ராகு கேது பெயர்ச்சி 2020🙏 இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது..?*

*🔯ராகு கேது பெயர்ச்சி 2020..!!*

🔯 இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நம்மை இயக்கி கொண்டே இருக்கின்றன. அவற்றில் நம்மை இயக்கும் தன்மை கொண்ட கோள்கள் என நம் முன்னோர்கள் ஒன்பது கோள்களை வரையறுத்துள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் நவகிரகங்களில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது. தற்போது நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி, மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றன.

🔯 இன்றைய பொழுதில் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி :

🔯 ராகுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

🔯 கேதுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி :

🔯 ராகுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

🔯 கேதுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.


🔯 எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சமயத்தில் திடீரென யோகத்தை உருவாக்கும் வல்லமை கொண்ட யோகாதிபதியான ராகுவும்...

🔯 மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நம்மை மோட்சத்தின் பாதைக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்ட மோட்சாதிபதியான கேதுவும்...

🔯 நவகிரகங்களில் மற்ற கிரகங்களை விட அதிக பலம் வாய்ந்தவர்கள்.

 விரிவான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020..விரைவில் பதிவிடப்படும்....
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Tuesday, July 28, 2020

இன்றைய குறள்


*குறள் 119:*

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

*கலைஞர் மு.கருணாநிதி உரை:*

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

*மு.வரதராசனார் உரை:*

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

*சாலமன் பாப்பையா உரை:*

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

*பரிமேலழகர் உரை:*

செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.).

*மணக்குடவர் உரை:*

நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின். இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இது பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.

*திருக்குறளார் வீ. முனிசாமி உரை:*

நடுவு நிலைமை என்பது சொல்லுகிற சொல்லிலில் கோணுதல் இல்லாமல் இருத்தலாகும். மனத்தினிடத்தில் கோணுதல் இல்லாமலிருப்பதைத் திண்ணியதாகப் பெற்றிருந்தால் அதுவும் நன்மை பயப்பதாகும்.

*Translation:*

Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.

*Explanation:*

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

🌷🌿🌺🌷🌿☘️🌺🌷🌿🌺🌷

*இந்த நாள் மிகச் சிறப்பான நாள்!*👌🌹🍀🥀🌻💐 *வாழ்க வளமுடன்!*👍🤝🌳🌴🌹🌷🌺🌻🌿

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்:
* இஞ்சித் துவையல் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சி டீ குடிக்க சளித் தொல்லை உண்டாகாது.

* காது சம்மந்தமாக எந்த நோயும் ஏற்படாமல் இருக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

* இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

* இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான் சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மில்லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும்.

* நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

* தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

* ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக நுரையீரலினுள் செல்லும் இரத்த நாளங்கள் நன்கு ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, சுவாச பிரச்சனைகள் நீங்கும். இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள Food poison வராது.🙏🌹🌈

அழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம்ன்னு தெரியுமா?

*அழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம்ன்னு தெரியுமா?*
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் நுரையீரல் முக்கியமான பணிகளை செய்யும்.

புகைப்பிடிப்பது, மாசடைந்த காற்று, வாகன புகை போன்றவற்றால் நுரையீரல் பாதிப்பு அடைகின்றன.

பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்தை பார்ப்போம்.

*தேவையான பொருட்கள்:*

மஞ்சள் தூள் – 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 800 கிராம் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

நாட்டுச்சர்க்கரை – 800 கிராம்

தண்ணீர் – 2 லிட்டர்

*செய்முறை*

ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொண்டு வர வேண்டும்.

அதிகாலை எழுந்தவுடன்ன காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.

பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேறி விடும்.

வடக்கே தலை வச்சா என்னாகும் ?

ஆன்மீகமும் அறிவியலும்..!

வடக்கே தலை வச்சா என்னாகும் ?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. 

வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டித்தால், நீ பழைய பஞ்சாங்கம்! 

எங்கே தலை வைத்தால் உனக்கென்ன!

என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள். 

பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்தாராம். 

போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். 

ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் காண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். 

ஆனால், இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம்.
 
பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். 

இதனால், குழம்பிய மனநிலை உருவாகும். 

ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. 

தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். 

உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. 

சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால், வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர்.
 
இதற்கு சள்ளேகனம் என்றும் பெயருண்டு. 

நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது. 

அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

பாமரர்கள் புரிந்து கொள்ளவே, பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 
புரிகிறதா!

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

கொய்யா பழம் மருத்துவ பயன்பாடு

♦கொய்யா பழம் மருத்துவ பயன்பாடு...♦

1. விட்டமின்கள்         
     A,B,B3,B6,C,பொட்டாசியம்,                   
மக்னீசியம்,புரதம்,காப்பர்,நியாசின்,அயன்,நிறைந்து உள்ளது.
2. நீர் சத்து 80%,நார்ச்சத்து நிறைந்து உள்ளது.
3.இருதய நோய்.
4.சர்க்கரை நோய்.
5.இரத்த அழுத்தம் குறையும்.
6.நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகும்.
7.மலச்சிக்கல்.
8.செரிமானம்.
9.உடல் எடை குறையும்.
10.கண் பார்வை தெளிவாகும்.
11.மனஅழுத்தம் குறையும்.
12.மூளை, நரம்பு மண்டலம் செயல் திறன் அதிகமாகும்.
13.தைராய்டு நோய்க்கு மிக சிறந்தது.
14.வயிற்றுப் போக்கு, சீதபேதி குணம் ஆகும்.
15.வாய் புண்,பல்வலி,ஈறு வீக்கம் குணம் ஆகும்.
16.முதுமையை தடுக்கும்.
17.மூளையின் இரத்த ஓட்டம் அதிகமாககும்.
18.Stimulating Cognitive function.
19.Scurvy நோய் குணம் ஆகும்.
20.Cough,cold,Throat pain.
21.Improves Complexion.
22.தோல் சுருக்கம் போக்கும்.
23.கருவளையம் போக்கும்.
24.கேன்சர் செல் குறையும்.
25.Anti oxidant.
26.கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக சிறந்தது.
27.தூக்கமின்மை சரி செய்யும்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Monday, July 27, 2020

வாழ்க்கையில் வெற்றி பெற

*சிந்தனைக்கு....*

வாழ்க்கையில் வெற்றி பெற "தகுதி" அவசியம்; அவை..

த - தன்னம்பிக்கை     
கு - குறிக்கோள்
தி – திட்டமிடல்

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்.. தரையில் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..! சிறகுகளை இழந்தாலும் வருந்தப்பட வேண்டியதில்லை

முன்னேறுவோம்... முல்லைக்குத் தேர் கொடுக்கும் அளவு அல்ல.. முடிந்த வரை கொடுக்கும் அளவுக்கு..!!

தொல்லைகள் இல்லாமல் எல்லைகளை அடைய முடியாது.

தோல்விகள் இல்லாமல் வெற்றியைப் பெற முடியாது.

இறக்கங்கள் இல்லாமல் ஏற்றத்தைக் காண முடியாது.

மாற்றங்கள் வரும்...உங்கள் எண்ணத்தில் மாறாமல் நீங்கள் நடந்தால்...

தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சியை பற்ற வைப்பதில் உள்ள கவனம், முதல் குச்சியிலேயே வந்து விட்டால் வாழ்க்கையில் எளிதில் ஜெயித்து விடலாம்...

நீங்கள் உயர்ந்திட நினைப்பவர்கள்...உங்கள் தகுதியை நன்கு தெரிந்தவர்கள்..!

உங்களை உயர விடாமல் தடுப்பவர்கள்...உங்கள் பலவீனத்தை தெரிந்தவர்கள்..!

உங்கள் பலவீனத்தை அறிந்து செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்..!!

வாழ்க வளமுடன்.

காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்

*🔯மாங்கல்ய பலம் தரும் ஆடிப்பெருக்கு கர்ப்பிணியான காவிரிக்கு சீர் தரும் ஸ்ரீரங்கநாதர்,*

 *🔯ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள்.*

 தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள்.

 காவிரி, வைகை, தாமிரபரணி
பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள்.

 ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

 ஆடியில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் இம்முறை மழையில்லாமல் ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் காவிரி கரையோரங்களில் களைகட்டாது இருக்கிறது.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம்.

 ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பெருகும் என்பது ஐதீகம். 

அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம்.
ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 காவிரிக்கு பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.

 ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை, 

புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.

 கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

காவிரியில் நீராடினால் தோஷம் நீங்கும்
அகத்திய முனிவர் காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தார். 

 இதனால் பூமி வறண்டது எங்கும் வறட்சி ஏற்பட்டது. விநாயகர் காக்கை உருவத்தில் வந்து கமண்டலத்தை தட்டிவிட பொங்கி பிரவாகம் எடுத்தாள் காவிரி அன்னை. மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் நீராடுகின்றனர்.

 இதனால் தோஷம் அடைந்த கங்கை விஷ்ணுவை வணங்க அவரது யோசனைப்படி காவிரியில் நீராடி தனது தோஷத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். இதனால் மகிழ்ச்சியடைந்து கர்ப்பவதியான காவிரி பெருமாளைக்காண பொங்கி பெருக்கெடுத்து வருகிறார் என்பது ஐதீகம்.

*🔯காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்*

ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசையுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானை மீது வந்து காவிரிக்கு கொடுப்பார்.

 ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்த பண்டிகை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

  ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி கரையோரங்களில் சீர்வரிசைகளை வைத்து காவிரியை வணங்கி செல்வ வளம் பெருகவும், குடும்பம் சிறக்கவும் வழிபடுகின்றனர்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

செவ்வாய்க்கிழமை ஓரை

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉☸☸
  🔱செவ்வாய்க்கிழமை ஓரை🔱  
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

கரூர் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்

#ஓம்_நமோ_நாராயணா. 

கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்.
திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.
தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.

இக்கோயிலில் அதிசயிக்கும் வகையில் பெருமாள் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார். இங்கு தாயாருக்கு தனியாக சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம். 

புரட்டாசி பிரம்மோற்சவம் :
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் இத்திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இத்திருவிழாவின் 7 - வது நாள் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் விழா கொண்டாடப்பட்டு, மறுநாள் அமராவதி நதிக்கரையில் ஸ்வாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து  10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விடையாற்றி உற்சவம் என்று சொல்லக்கூடிய பூ பல்லக்கு, முத்துப் பல்லக்கு போன்ற விஷேசமான வாகனங்களில் 10 நாட்கள் ஸ்வாமி வலம் வருவார்.  திருவிழாவின் இறுதி நாளன்று ஸ்வாமிக்கு பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு புஷ்ப யாக அர்ச்சனை செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெறும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.

கால் பாதம் அடித்தல்:
கை, கால் பிரச்னைகள் தீர வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தங்களின் பிரச்னை தீர்ந்தவுடன், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு ஒரு கல்லில் தாங்கள் குணம் பெற்ற கை அல்லது காலை அக்கல்லின் மீது வைத்து கை, காலின் வடிவத்தைக் குறித்துக்கொண்டு அதன் மீது அடிப்பர். இந்த வழக்கம் நெடுங்காலமாக இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கு வந்து திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்குத் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த கல்யாண உற்சவம் ஞாயிறு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைக ளில் மட்டும் நடைபெறுகிறது.

நடை திறக்கும் நேரம்:-

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கல்யாண வெங்கடரமண பெருமாளின் அருள் பெற்று பயனடைவோம்.🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.

ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது.

 வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. 

அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
 
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. 

தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர்.

 அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.

மேலும், கோயிலில் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும்.

 எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.✍🏼🌹

ஜப்பான் நாட்டினர் நேமாலஜி !!

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை வெவ்வேறாக இருக்கும். நம் நாட்டில் ஜாதகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜப்பான் நாட்டினர் நேமாலஜி எனப்படும் பெயருக்குக் கொடுக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டு ஜோதிட முறைப்படி ஒருவரது பெயரின் மூன்றாவது எழுத்துத்தான், அவரது வாழ்க்கையை தீர்மானம் செய்கிறதாம்.

அந்த வகையில் மூன்றாவதாக வரும் ஆங்கில எழுத்தின் குணநலனை கொடுத்திருக்கிறோம். படித்து ரசியுங்கள், உங்கள் குடும்பத்தார், நண்பருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது.

மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள்.

எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள்.

ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும்.

பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I-என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம்.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற


இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K- என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P – என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q – என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R– என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.


S என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள்.

இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது 

புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள்.

கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y ..என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z ..என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

Sunday, July 26, 2020

காலபைரவர்

🕉️🌷🕉️🌷🕉️🌷🕉️🌷🕉🌷🕉

🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌻

*இன்று அஷ்டமி!!!*

*காசி காலபைரவர் கோயில் வாரணாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பரநாத், விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும்.*

*#Kalabhairava #Bhairavar #Lordshiva #Kasi #Kashi #Varanasi #Kasiviswanath #Ashtami*
*#Kalbhairav #Ganga #Kaalbhairav*

✴️🌺✴️🌺✴️🌺✴️🌺✴️🌺✴️🌺✴️

ஸ்ரீஸுதர்சனமஹாமூலமந்த்ரம்

#ஸ்ரீஸுதர்சனமஹாமூலமந்த்ரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய பராய பரம புருஷாய பரமாத்மனே பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஔஷத விஷ ஆபிசார அஸ்த்ர சஸ்த்ரான் சம்ஹர சம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய 

ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரிஹிதாய ஸர்வதிக் க்ஷோபனகராய ஹூம் பட் பரப்ரஹ்மணே பரம் ஜ்யோதிஷே ஸ்வாஹா||
  ஓம் நமோ பகவதே ஸுதர்சனாய ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய | மஹா சக்ராய| மஹா ஜ்வாலாய| ஸர்வரோக ப்ரசமனாய கர்மபந்த விமோசனாய பாதாதிமஸ்த பர்யந்தம் வாத ஜனித ரோகாந் பித்த ஜனித ரோகாந் ஸ்லேஷ்ம ஜனித ரோகாந் தாதுஸங்கலி கோத்பவ நாநாவிதாரலோகாந் 
நாசய நாசய ப்ரஸமய ப்ரஸமய ஆரோக்கியம் தேஹி தேஹி ஓம் மஹா ஸுதர்சனாய ஹூம்பட் ஸ்வாஹா||🔥🔥🚩

தஞ்சை_வாராஹி_வைபவம்

🌷✡️✡️✡️✡️✡️✡️✡️✡️🌷
*தஞ்சை_வாராஹி_வைபவம்*
🌷✡️⚜️⚜️⚜️⚜️⚜️✡️🌷
*ஆஷாட நவராத்திரி ஆறாவது திருநாளில் தஞ்சாவூர் வாராஹி மாதுளை முத்து அலங்காரத்தில் காட்சி தருவாள்.* 

*வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தது மாதுளை. அன்றலர்ந்த மாதுளைபூவினால் அர்ச்சனை செய்தால் மிகவும் மகிழ்வாள்.* *மாதுளை முத்துக்களால் அர்ச்சனை செய்தால் தீவினைகள் அகன்றுவிடும். நவக்கிரக தோஷமும் விலகி சம்பத் அபிவிருத்தியாகும். வாராஹிக்கு தொடர்ந்து மாதுளை அர்ச்சனை செய்து வந்தால் கடன் தீரும்.*

*வாராஹி தேவியை தொடர்ந்து வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.*

*ஓம் போத்ரிண்யை நம:*

🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

வாரியர் வாய்மொழி

*“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”*

*"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"*

*எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?*

கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”

வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..

மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா.

சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.

கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். 

“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...”

- அருள்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள்...
🙏 *வாழ்கவளமுடன்*🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

இன்றைய கோபுர தரிசனம்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் திருக்கொடியலூர்

ஸ்ரீ சனீஸ்வர பகவான் அவதரித்த திருக்கொடியலூர்

சூரியனின் பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயா தேவியும், மேகநாதரிடம் எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என்று வழிபட்டனர்.
 
அதற்கு இறைவன் நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி அம்பாள் லலிதாவையும், தன்னையும் வழிபாடு செய்தால் அந்த பலன் கிடைக்கும் என வரமளித்தார்.

அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் இத்தலத்தில் பூஜை செய்தனர். பகவான் சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மனை ஜனிக்கும்படி செய்தார்.

பின்னர், சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானை ஜனிக்கும்படி அருள்செய்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்துக்கு மேற்கே உள்ளது.

கூடியலூர், காலப்போக்கில் பெயர் மருவி கொடியலூர் ஆயிற்று. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்படுகிறது.

அகத்தியர், ஹயக்கிரீவர் கூறியபடி லலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையைப் பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீ லலிதாம்பிகையை ஆனந்தவல்லியாக நினைத்து, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமியை பூஜை செய்து பெரும் பேறு பெற்றார். அந்த சமயத்தில் அசரீரியாக அகத்தீஸ்வரே எமதர்மராஜனிடமும், சனீஸ்வரரிடமும் இத்தலத்தில் வீற்றிருந்து, எங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எம வதையையும், சனி உபாதையையும் நீங்கச் செய்து அருள்புரிய வேண்டும் என கட்டளையிட்டார்.

அதிலிருந்து கூடியலூரான கொடியலூரின் தென்புறம் எமதர்மனும், வடபுறம் சனீஸ்வர பகவானும் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.

அகத்தியர் சிவ பூஜை செய்த தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் ஸ்ரீ சனிஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் அமைந்துள்ளார். மேலும்,
ஸ்ரீ சனிஸ்வர பகவானின் எதிரே நின்று தோஷத்தை நீக்குவதுடன் நற்பலன்களை பெருகச் செய்யும் தலமாக விளங்குகிறது.
ஏழரைநாட்டு சனி, அஷ்டம சனி, சனி தோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷமும் நீங்கி நன்மை ஏற்படும்.

வழி: திருவாரூர் மாவட்டம், பேரளத்திலிருந்து மேற்கே திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கு அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இன்றைய தின காயத்ரி

*💫இன்றைய தின காயத்ரி💫*

*💫திங்கள்க்கிழமை*

*🔯விநாயகர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்

*🔯 காயத்ரி மந்திரம்*

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!


*🔯இன்றைய கிழமை காயத்திரி*

*⚜சந்திரன் காயத்ரி*

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

*🔯இன்றைய திதி நித்யா காயத்திரி.*

*⚜8த்வரிதா(அஷ்டமி)*
(9:48amமுதல்)

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

*⚜பலன்கள்:* எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்

*🔯இன்றைய நட்சத்திர காயத்ரி*

*⚜சித்திரை நட்சத்திரம் :*
(02:03pmவரை)

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

*⚜சுவாதி நட்சத்திரம் :*
(02:03pmமுதல்)

ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

*🔯நவகிரக மந்திரம்,*

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ:

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...