Thursday, July 30, 2020

அஷ்டதிக் பாலகர்கள் யார்?

ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻
ஓம் அஷ்டதிக் பாலக தேவதாப்யோ நம.

அஷ்டதிக் பாலகர்கள் யார்? 

இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?

அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். 

எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று  அழைக்கிறோம்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். 

இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே 

இந்திரன், 
அக்னி தேவன், 
எமன், 
நிர்ருதி, 
வருண தேவன், 
வாயு தேவன், 
குபேரன், 
ஈசானன் 
ஆகிய எட்டு பேர் விளங்குகின்றனர்.

நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து, நாம் செய்யும் எல்லா செயல்களையும் கவனித்து, அதற்கு சாட்சியாகவும் இருக்கும் திசைநாயகர்களே,அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

எண் திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பவர்களும் அவர்களே.

இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.  

வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவர்களாக சிறப்பித்து சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அஷ்டதிக் பாலகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திரன்: 

கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே  அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
 
அக்னி தேவன்: 

தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி. இவரை வழிபாடு செய்தால் தேக வனப்பு மற்றும் தேக பலம், மனஅமைதி,  குடும்ப மேன்மை கிடைக்கும்.
 
எமன்: 

தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சூரிய பகவான்  மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் குபேர ஜாயை. இவரை வழிபாடு செய்தால் நம்மை  அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும்.
 
வருண பகவான்: 

மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி.  இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.
 
நிருதி: 

தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி தேவனின், மனைவி பெயர் கட்கி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும்.
 
வாயு பகவான்: 

வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை.இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.
 
குபேரன்: 

வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். இவரை  வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
 
ஈசானன்: 

வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது  குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.
அஷ்டதிக் பாலகர்களின் காயத்ரி மந்திரங்கள்:-

1.இந்திர காயத்ரி மந்திரம்:

ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே 
வஜ்ர ஹஸ்தாய தீமஹி 
தந்நோ இந்திர ப்ரசோதயாத்.

2.அக்னி காயத்ரி மந்திரம்:

ஓம் மஹா ஜவாலாய வித்மஹே 
அக்னி தேவாய தீமஹி 
தந்நோ அக்னி ப்ரசோதயாத்.

3.யம காயத்ரி மந்திரம்:

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே
தண்ட தராய தீமஹி 
தந்நோ யம ப்ரசோதயாத்.

4.நிர்ருதி காயத்ரி மந்திரம்:

ஓம் நிசாசராய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தந்நோ நிர்ருதி ப்ரசோதயாத்

5.வருண காயத்ரி மந்திரம்:

ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலபுருஷாய தீமஹி 
தந்நோ வருண ப்ரசோதயாத்.

6.வாயு காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே 
பூலோக சஞ்சாரய தீமஹி 
தந்நோ வாயு ப்ரசோதயாத்.

7.குபேர காயத்ரி மந்திரம்:

ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி 
தந்நோ குபேர ப்ரசோதயாத்.

8.ஈசான்ய காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே 
சிவ ரூபாய தீமஹி 
தந்நோ ரூத்ர ப்ரசோதயாத்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...