Sunday, July 26, 2020

காலபைரவர்

🕉️🌷🕉️🌷🕉️🌷🕉️🌷🕉🌷🕉

🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌻

*இன்று அஷ்டமி!!!*

*காசி காலபைரவர் கோயில் வாரணாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பரநாத், விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும்.*

*#Kalabhairava #Bhairavar #Lordshiva #Kasi #Kashi #Varanasi #Kasiviswanath #Ashtami*
*#Kalbhairav #Ganga #Kaalbhairav*

✴️🌺✴️🌺✴️🌺✴️🌺✴️🌺✴️🌺✴️

ஸ்ரீஸுதர்சனமஹாமூலமந்த்ரம்

#ஸ்ரீஸுதர்சனமஹாமூலமந்த்ரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய பராய பரம புருஷாய பரமாத்மனே பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஔஷத விஷ ஆபிசார அஸ்த்ர சஸ்த்ரான் சம்ஹர சம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய 

ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரிஹிதாய ஸர்வதிக் க்ஷோபனகராய ஹூம் பட் பரப்ரஹ்மணே பரம் ஜ்யோதிஷே ஸ்வாஹா||
  ஓம் நமோ பகவதே ஸுதர்சனாய ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய | மஹா சக்ராய| மஹா ஜ்வாலாய| ஸர்வரோக ப்ரசமனாய கர்மபந்த விமோசனாய பாதாதிமஸ்த பர்யந்தம் வாத ஜனித ரோகாந் பித்த ஜனித ரோகாந் ஸ்லேஷ்ம ஜனித ரோகாந் தாதுஸங்கலி கோத்பவ நாநாவிதாரலோகாந் 
நாசய நாசய ப்ரஸமய ப்ரஸமய ஆரோக்கியம் தேஹி தேஹி ஓம் மஹா ஸுதர்சனாய ஹூம்பட் ஸ்வாஹா||🔥🔥🚩

தஞ்சை_வாராஹி_வைபவம்

🌷✡️✡️✡️✡️✡️✡️✡️✡️🌷
*தஞ்சை_வாராஹி_வைபவம்*
🌷✡️⚜️⚜️⚜️⚜️⚜️✡️🌷
*ஆஷாட நவராத்திரி ஆறாவது திருநாளில் தஞ்சாவூர் வாராஹி மாதுளை முத்து அலங்காரத்தில் காட்சி தருவாள்.* 

*வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தது மாதுளை. அன்றலர்ந்த மாதுளைபூவினால் அர்ச்சனை செய்தால் மிகவும் மகிழ்வாள்.* *மாதுளை முத்துக்களால் அர்ச்சனை செய்தால் தீவினைகள் அகன்றுவிடும். நவக்கிரக தோஷமும் விலகி சம்பத் அபிவிருத்தியாகும். வாராஹிக்கு தொடர்ந்து மாதுளை அர்ச்சனை செய்து வந்தால் கடன் தீரும்.*

*வாராஹி தேவியை தொடர்ந்து வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.*

*ஓம் போத்ரிண்யை நம:*

🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

வாரியர் வாய்மொழி

*“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”*

*"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"*

*எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?*

கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”

வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..

மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா.

சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.

கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். 

“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...”

- அருள்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள்...
🙏 *வாழ்கவளமுடன்*🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

இன்றைய கோபுர தரிசனம்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் திருக்கொடியலூர்

ஸ்ரீ சனீஸ்வர பகவான் அவதரித்த திருக்கொடியலூர்

சூரியனின் பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயா தேவியும், மேகநாதரிடம் எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என்று வழிபட்டனர்.
 
அதற்கு இறைவன் நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி அம்பாள் லலிதாவையும், தன்னையும் வழிபாடு செய்தால் அந்த பலன் கிடைக்கும் என வரமளித்தார்.

அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் இத்தலத்தில் பூஜை செய்தனர். பகவான் சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மனை ஜனிக்கும்படி செய்தார்.

பின்னர், சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானை ஜனிக்கும்படி அருள்செய்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்துக்கு மேற்கே உள்ளது.

கூடியலூர், காலப்போக்கில் பெயர் மருவி கொடியலூர் ஆயிற்று. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்படுகிறது.

அகத்தியர், ஹயக்கிரீவர் கூறியபடி லலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையைப் பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீ லலிதாம்பிகையை ஆனந்தவல்லியாக நினைத்து, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமியை பூஜை செய்து பெரும் பேறு பெற்றார். அந்த சமயத்தில் அசரீரியாக அகத்தீஸ்வரே எமதர்மராஜனிடமும், சனீஸ்வரரிடமும் இத்தலத்தில் வீற்றிருந்து, எங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எம வதையையும், சனி உபாதையையும் நீங்கச் செய்து அருள்புரிய வேண்டும் என கட்டளையிட்டார்.

அதிலிருந்து கூடியலூரான கொடியலூரின் தென்புறம் எமதர்மனும், வடபுறம் சனீஸ்வர பகவானும் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.

அகத்தியர் சிவ பூஜை செய்த தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் ஸ்ரீ சனிஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் அமைந்துள்ளார். மேலும்,
ஸ்ரீ சனிஸ்வர பகவானின் எதிரே நின்று தோஷத்தை நீக்குவதுடன் நற்பலன்களை பெருகச் செய்யும் தலமாக விளங்குகிறது.
ஏழரைநாட்டு சனி, அஷ்டம சனி, சனி தோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷமும் நீங்கி நன்மை ஏற்படும்.

வழி: திருவாரூர் மாவட்டம், பேரளத்திலிருந்து மேற்கே திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கு அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இன்றைய தின காயத்ரி

*💫இன்றைய தின காயத்ரி💫*

*💫திங்கள்க்கிழமை*

*🔯விநாயகர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்

*🔯 காயத்ரி மந்திரம்*

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!


*🔯இன்றைய கிழமை காயத்திரி*

*⚜சந்திரன் காயத்ரி*

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

*🔯இன்றைய திதி நித்யா காயத்திரி.*

*⚜8த்வரிதா(அஷ்டமி)*
(9:48amமுதல்)

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

*⚜பலன்கள்:* எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்

*🔯இன்றைய நட்சத்திர காயத்ரி*

*⚜சித்திரை நட்சத்திரம் :*
(02:03pmவரை)

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

*⚜சுவாதி நட்சத்திரம் :*
(02:03pmமுதல்)

ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

*🔯நவகிரக மந்திரம்,*

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ:

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

இன்றைய சிந்தனை

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*வாழ்க்கையின் வெற்றி எதில் இருக்கிறது..??*

செல்வத்திலா? செல்வாக்கிலா? படிப்பிலா? உயர் பதவியிலா? 

இதில் எதிலும் அது இல்லை! 

அவைகள் உங்களுக்கு வசதிகளையும், நல்வாய்ப்புகளையும் தேடித் தர பயன்படலாம்!

அதனால் மட்டும் உங்கள் வாழ்க்கை நிறைவடைந்து வெற்றி அடைந்து விடாது!

அவைகள் எல்லாம் கிடைத்த பிறகும் உங்கள் மனசு மீண்டும் தேடி அலைந்து கொண்டே தான் இருக்கும்! எதை?......

மன அமைதியை அதாவது நிம்மதியை!

நிம்மதி தான் மனித வாழ்க்கைக்கு நிறைவு தரக்கூடியது!

வாழ்க்கையில் நிம்மதியை மொத்தமாக எதைக் கொடுத்தும் வாங்கிக் கொள்ள முடியாது!

அது சிறு சேமிப்பு போன்ற ஒரு விஷயம்! 

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அதைத் தேடி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்!

பல சான்றோர்கள் கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று சொல்வார்கள்! 

ஆம், கடவுள் நமக்குள் தன் பிரதிநிதியை வைத்துத் தான் ஒவ்வொரு மனிதனையும் படைக்கிறான்.

அந்தப் பிரதிநிதி நம் உயிர் பிரியும் வரை, ஒரு வினாடி கூடத் தூங்காமல் விழித்துக் கொண்டு, எது தர்மம், எது நியாயம் என்று நமக்கு வழி காட்டிக் கொண்டு தான் இருக்கிறான்!

அதற்குப் பெயர் தான் மனச்சாட்சி! 

எப்பொழுது நாம் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறோமோ அப்பொழுதே நம் மனசில் ஒரு சுமை ஒரு பாரம் ஏற்றப்படுகிறது! நாம் வாழ்நாள் முழுவதும் பல சுமைகளை பாரங்களை ஏற்றிக் கொண்டே போகிறோம்!

நம் மனசில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகப்போக நம் மனசு சுமை தாங்காமல் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும்!

மன அழுத்தம் ஒரு கொடிய நோய்!
அதற்கு சரியான மருந்து கிடையாது! 

அந்த அழுத்தம் ஒரு பாதுகாப்பற்ற மனோநிலையை உங்களுக்குள் உருவாக்கி, நம் மன நிம்மதியைப் போக்கி, நம் வாழ்க்கையில் நாம் எதை தேடிக் கொண்டாலும் நிம்மதியில்லாமல் நம்மை வேதனையில் தள்ளி விடுகிறது!

யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று தெரிந்தே நாம் மனச்சாட்சிக்கு விரோதமாக செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு சுமை தான்!

வாழ்நாள் முழுவதும் இப்படி நிறைய சுமைகளை நாம் ஏற்றிக் கொண்டே போகிறோம்!

எப்படி சிறு சேமிப்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக நாம் பணத்தை சேமித்துக் கொண்டே போகிறோமோ, அதே போல் நம் வாழ்க்கையில் மனசாட்சி தவறு என்று சுட்டிக் காட்டும் தவறுகளை எல்லாம் அதாவது அந்தப் பாவ சுமைகளை  எல்லாம் அவ்வப்பொழுது வாழ்க்கையில் இறக்கி வைத்துக் கொண்டே போக வேண்டும்! 

மனசில் சுமை இல்லாவிட்டால்...
மன அழுத்தம் இருக்காது..!

அதன் சுகமே தனி..!

*அனுபவித்துப் பாருங்கள்!* 
*சொர்க்கம் உங்கள் கைகளில்!!*

*💗வாழ்க வளமுடன்💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...