Saturday, July 25, 2020

Think Think Think !!!

ஏன் அவங்க அதிகம் யாரிடமும் பேசமாட்டாறாங்க.
நிறைய பேசி நிறைய இழந்துருப்பாங்க அதான்..

ஏன் அவங்க அதிகம் சிரிக்கமாட்டாறாங்க.
நிறைய சிரிச்சு நிறைய 
அழுதுருப்பாங்க அதான்..

ஏன் அவங்க அதிகம் யாரிடமும் சேரவே மாட்டாங்க.
நிறைய சேர்ந்து துரோகத்தை அனுபவிச்சிருப்பாங்க அதான்..

ஏன் அவங்க காதலை பத்தி பேசினா எரிஞ்சி விழறாங்க.
நிறைய அன்பை பார்த்து அதுல ஏமாற்றத்தை சந்திச்சிருப்பாங்க அதான்..

ஏன் அவங்க எல்லாத்துக்கும் சந்தோஷபடறாங்க.
நிறைய துக்கங்களை சிரிப்பால் மறைக்க பார்க்கிறாங்க அதான்..

ஏன் ஏன் ஏன்?
எல்லோரிடமும் கேள்வி கேட்க நிறைய 'ஏன்' உள்ளது இங்கு.
எதனால் இப்போது இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பின் 
அதனால் அப்போது அப்படி இருந்ததால்,
இப்படி இருக்கிறார்கள் என்று தான் பதில் வருமே தவிர பிறப்பால் எவரும் அதே குணநலன்களோடு கடைசி வரை வாழ்ந்ததில்லை
வாழ விடுவதில்லை..

கால சூழல் 
பருவ மாற்றம் 
சந்திக்கும் பிரச்சனைகள் 
மன்னிக்கும் மனிதர்கள் 
ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்து செல் அரிப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை அழித்து முற்பாதியில் இருந்தாற் போல பிற்பாதியில் இருக்க விடுவதில்லை.
நீங்கள் வேண்டுமானால் சோதித்து பாருங்கள்,
ஒவ்வொருவருக்கும் பத்து வருடங்களுக்கு ஒருமுறை காலமாற்றம் மாறிக் கொண்டே இருக்கிறது.

அவர்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்...
குனிந்து போவதால்
பணிந்து போவதாக அர்த்தமில்லை
துணிந்து போகிறேன் என்று அர்த்தம்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...