Sunday, July 26, 2020

திருச்சுனை அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலின் சிறப்புகள்

🚩🚩மதுரை: திருமணம் கைகூடும் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலின் சிறப்புகள்🕉️🕉️🔥
திருமணம் கைகூடும் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் பற்றி இன்று ஒரு கோவிலின் சிறப்புகள்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. உலகமே ஒட்டுமொத்தமாக சிவபெருமானின் திருமணத்தை காண கயிலையில் திரண்டதாகவும், தேவர்கள் உட்பட அனைவரும் அங்கு ஒன்று கூட, பாரம் தாங்காமல் பூமி சரிந்தததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமான் பூமியின் சமநிலைக்காக குறுமுனி அகத்தியரை தெற்கு பக்கம் அனுப்பியதாகவும். அம்மை, அப்பனின் திருமணத்தை காணாமல் கிழக்கு நோக்கி நடந்து சென்ற போது ,வழியில் பாறையில் சிலைவடித்து சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்தான் இந்த திருச்சுனை அகத்தீஸ்வரர் கோயில் என்றும் தல வரலாறு கூறுகிறது. அப்போது அகஸ்தியருக்கு தனது திருமண காட்சியை பார்க்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் சிவன். கடம்ப வனக்காடாக அகஸ்தியர் இங்கு தங்கியிருந்து சிவபெருமானின் திருமணக்காட்சியை கண்டு அருள் பெற்றதால், திருமண பாக்கியம் கிட்டும் முக்கிய புண்ணியஸ்தலமாக விளங்குகிறது .
அகத்தியரின் பெயராலேயே இறைவன் அகத்தீஸ்வரர் எனவும், அம்மன் பாடகவள்ளித் தாயார் என்ற திருநாமத்துடனும் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் சுனை தோண்டி வழிபட்டதால் இவ்வூருக்கு திருச்சுனை என்ற பெயரே வழக்காகியது. மன அமைதிக்காகவும், திருமணங்களில் ஏற்படும் தோஷம், சங்கடங்கள் என நிகழும் பல இடையூறுகளையும், இன்னல்களையும் நீக்கி திருமணம் நல்லபடியாக நடக்க அகஸ்தீஸ்வரர் அருள் புரிகிறார். பெண்களுக்கு திருமணத்தடை இருந்தால் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் பாடகவள்ளி அம்மனுக்கு மாங்கல்யமும்,  பட்டு வஸ்திரமும் வழங்கி வழிபட்டால் திருமணமும் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆண்களுக்கு திருமணத்தடை இருந்தால் கிழக்கு நோக்கி அழகுற அமர்ந்திருக்கும் அகஸ்தீஸ்வரருக்கு மாலை வழங்கி வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு விரைவாக திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

 
தனிச்சன்னிதிகளில் விநாயகர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், துர்கையம்மன், பைரவர், ரேவதியுடன் சந்திரன், உஷாதேவி பிரத்யுஷா தேவியுடன் சூரியன், நவக்கிரங்கள்,காட்சியளிக்கின்றனர். கோயிலின் பின்புறம் அகத்திய முனி ஏற்படுத்திய வற்றாத சுனை இன்றளவும் உள்ளது. மன்னன் மாறன் சுந்தரபாண்டியன் இத்திருத்தலத்தின் கட்டுமானப் பணியை ஏற்றபோது அவருக்குத் துணையாக நின்று உதவிபுரிந்த பெரிய ஆண்டி, சின்ன ஆண்டி, வெள்ளையம்மாள் ஆகிய மூவருக்கும் கோயிலின் ஒரு தூணில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இவர்களின் வம்சாவளியினர் இத்தூணை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இத்தூணிற்கு மட்டும் தனி பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும் தீர்த்தமாக திருச்சுனையும் உள்ளது.  கோயிலில் முக்கியதிருவிழாவாக சிவராத்திரி மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன🚩


🚩சர்வம் சிவமயம்🔥

🕉️🔥*தென்னாடுடைய 
சிவனேபோற்றி*
*என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி*🚩🚩

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...