Sunday, July 26, 2020

இன்றைய குறள்

*அன்பு நண்பர்களே! சிறப்பான காலை வணக்கம்!*🙏🙏🙏

*குறள் 236:*

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

*கலைஞர் மு.கருணாநிதி உரை:*

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

*மு.வரதராசனார் உரை:*

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

*சாலமன் பாப்பையா உரை:*

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

*பரிமேலழகர் உரை:*

தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்).

*மணக்குடவர் உரை:*

பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

*Translation:*

If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face.

*Explanation:*

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

🌻☘️🌳🌻☘️🌿🌳🌻☘️🌳🌻

*இந்த நாள் மிக இனிய நாள்!*👌🌹🌷🌿🥀☘️ *வாழ்க வளமுடன்!*👍🤝🌹🌺💐🌻🥀🍀

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...