Tuesday, July 28, 2020

கொய்யா பழம் மருத்துவ பயன்பாடு

♦கொய்யா பழம் மருத்துவ பயன்பாடு...♦

1. விட்டமின்கள்         
     A,B,B3,B6,C,பொட்டாசியம்,                   
மக்னீசியம்,புரதம்,காப்பர்,நியாசின்,அயன்,நிறைந்து உள்ளது.
2. நீர் சத்து 80%,நார்ச்சத்து நிறைந்து உள்ளது.
3.இருதய நோய்.
4.சர்க்கரை நோய்.
5.இரத்த அழுத்தம் குறையும்.
6.நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகும்.
7.மலச்சிக்கல்.
8.செரிமானம்.
9.உடல் எடை குறையும்.
10.கண் பார்வை தெளிவாகும்.
11.மனஅழுத்தம் குறையும்.
12.மூளை, நரம்பு மண்டலம் செயல் திறன் அதிகமாகும்.
13.தைராய்டு நோய்க்கு மிக சிறந்தது.
14.வயிற்றுப் போக்கு, சீதபேதி குணம் ஆகும்.
15.வாய் புண்,பல்வலி,ஈறு வீக்கம் குணம் ஆகும்.
16.முதுமையை தடுக்கும்.
17.மூளையின் இரத்த ஓட்டம் அதிகமாககும்.
18.Stimulating Cognitive function.
19.Scurvy நோய் குணம் ஆகும்.
20.Cough,cold,Throat pain.
21.Improves Complexion.
22.தோல் சுருக்கம் போக்கும்.
23.கருவளையம் போக்கும்.
24.கேன்சர் செல் குறையும்.
25.Anti oxidant.
26.கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக சிறந்தது.
27.தூக்கமின்மை சரி செய்யும்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Monday, July 27, 2020

வாழ்க்கையில் வெற்றி பெற

*சிந்தனைக்கு....*

வாழ்க்கையில் வெற்றி பெற "தகுதி" அவசியம்; அவை..

த - தன்னம்பிக்கை     
கு - குறிக்கோள்
தி – திட்டமிடல்

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்.. தரையில் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..! சிறகுகளை இழந்தாலும் வருந்தப்பட வேண்டியதில்லை

முன்னேறுவோம்... முல்லைக்குத் தேர் கொடுக்கும் அளவு அல்ல.. முடிந்த வரை கொடுக்கும் அளவுக்கு..!!

தொல்லைகள் இல்லாமல் எல்லைகளை அடைய முடியாது.

தோல்விகள் இல்லாமல் வெற்றியைப் பெற முடியாது.

இறக்கங்கள் இல்லாமல் ஏற்றத்தைக் காண முடியாது.

மாற்றங்கள் வரும்...உங்கள் எண்ணத்தில் மாறாமல் நீங்கள் நடந்தால்...

தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சியை பற்ற வைப்பதில் உள்ள கவனம், முதல் குச்சியிலேயே வந்து விட்டால் வாழ்க்கையில் எளிதில் ஜெயித்து விடலாம்...

நீங்கள் உயர்ந்திட நினைப்பவர்கள்...உங்கள் தகுதியை நன்கு தெரிந்தவர்கள்..!

உங்களை உயர விடாமல் தடுப்பவர்கள்...உங்கள் பலவீனத்தை தெரிந்தவர்கள்..!

உங்கள் பலவீனத்தை அறிந்து செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்..!!

வாழ்க வளமுடன்.

காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்

*🔯மாங்கல்ய பலம் தரும் ஆடிப்பெருக்கு கர்ப்பிணியான காவிரிக்கு சீர் தரும் ஸ்ரீரங்கநாதர்,*

 *🔯ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள்.*

 தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள்.

 காவிரி, வைகை, தாமிரபரணி
பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள்.

 ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

 ஆடியில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் இம்முறை மழையில்லாமல் ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் காவிரி கரையோரங்களில் களைகட்டாது இருக்கிறது.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம்.

 ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பெருகும் என்பது ஐதீகம். 

அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம்.
ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 காவிரிக்கு பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.

 ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை, 

புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.

 கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

காவிரியில் நீராடினால் தோஷம் நீங்கும்
அகத்திய முனிவர் காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தார். 

 இதனால் பூமி வறண்டது எங்கும் வறட்சி ஏற்பட்டது. விநாயகர் காக்கை உருவத்தில் வந்து கமண்டலத்தை தட்டிவிட பொங்கி பிரவாகம் எடுத்தாள் காவிரி அன்னை. மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் நீராடுகின்றனர்.

 இதனால் தோஷம் அடைந்த கங்கை விஷ்ணுவை வணங்க அவரது யோசனைப்படி காவிரியில் நீராடி தனது தோஷத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். இதனால் மகிழ்ச்சியடைந்து கர்ப்பவதியான காவிரி பெருமாளைக்காண பொங்கி பெருக்கெடுத்து வருகிறார் என்பது ஐதீகம்.

*🔯காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்*

ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசையுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானை மீது வந்து காவிரிக்கு கொடுப்பார்.

 ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்த பண்டிகை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

  ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி கரையோரங்களில் சீர்வரிசைகளை வைத்து காவிரியை வணங்கி செல்வ வளம் பெருகவும், குடும்பம் சிறக்கவும் வழிபடுகின்றனர்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

செவ்வாய்க்கிழமை ஓரை

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉☸☸
  🔱செவ்வாய்க்கிழமை ஓரை🔱  
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

கரூர் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்

#ஓம்_நமோ_நாராயணா. 

கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்.
திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.
தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.

இக்கோயிலில் அதிசயிக்கும் வகையில் பெருமாள் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார். இங்கு தாயாருக்கு தனியாக சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம். 

புரட்டாசி பிரம்மோற்சவம் :
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் இத்திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இத்திருவிழாவின் 7 - வது நாள் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் விழா கொண்டாடப்பட்டு, மறுநாள் அமராவதி நதிக்கரையில் ஸ்வாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து  10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விடையாற்றி உற்சவம் என்று சொல்லக்கூடிய பூ பல்லக்கு, முத்துப் பல்லக்கு போன்ற விஷேசமான வாகனங்களில் 10 நாட்கள் ஸ்வாமி வலம் வருவார்.  திருவிழாவின் இறுதி நாளன்று ஸ்வாமிக்கு பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு புஷ்ப யாக அர்ச்சனை செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெறும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.

கால் பாதம் அடித்தல்:
கை, கால் பிரச்னைகள் தீர வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தங்களின் பிரச்னை தீர்ந்தவுடன், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு ஒரு கல்லில் தாங்கள் குணம் பெற்ற கை அல்லது காலை அக்கல்லின் மீது வைத்து கை, காலின் வடிவத்தைக் குறித்துக்கொண்டு அதன் மீது அடிப்பர். இந்த வழக்கம் நெடுங்காலமாக இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கு வந்து திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்குத் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த கல்யாண உற்சவம் ஞாயிறு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைக ளில் மட்டும் நடைபெறுகிறது.

நடை திறக்கும் நேரம்:-

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கல்யாண வெங்கடரமண பெருமாளின் அருள் பெற்று பயனடைவோம்.🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.

ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது.

 வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. 

அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
 
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. 

தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர்.

 அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.

மேலும், கோயிலில் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும்.

 எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.✍🏼🌹

ஜப்பான் நாட்டினர் நேமாலஜி !!

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை வெவ்வேறாக இருக்கும். நம் நாட்டில் ஜாதகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜப்பான் நாட்டினர் நேமாலஜி எனப்படும் பெயருக்குக் கொடுக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டு ஜோதிட முறைப்படி ஒருவரது பெயரின் மூன்றாவது எழுத்துத்தான், அவரது வாழ்க்கையை தீர்மானம் செய்கிறதாம்.

அந்த வகையில் மூன்றாவதாக வரும் ஆங்கில எழுத்தின் குணநலனை கொடுத்திருக்கிறோம். படித்து ரசியுங்கள், உங்கள் குடும்பத்தார், நண்பருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது.

மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள்.

எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள்.

ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும்.

பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I-என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம்.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற


இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K- என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P – என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q – என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R– என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.


S என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள்.

இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது 

புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள்.

கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y ..என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z ..என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...